visitors

Tuesday, June 8, 2010

இடையே ஒரு சின்ன கேள்வி பதில்

இடையே ஒரு சின்ன கேள்வி பதில்

(திரு டோண்டு அவர்களின் தளத்தில் "புரட்சி வீரர்களின்" கொள்கை மற்றும் கள-பணியைப்பற்றி சிலாகித்து எழுதிய ஒருவருக்கு நான் கொடுத்த பதில்)


// பல சமூக பிரச்சனைகளுக்கு களம் இறங்கி பணியாற்றி கொண்டிருப்பவர்களை ஓரிரு காரணம் கூறி சமூக விரோதி போல் தோற்றமளிக்க செய்வது தவறு//

The Nationalsozialistische Volkswohlfahrt (NSV), meaning "National Socialist People's Welfare" என்ற ஒரு இயக்கம் ஜெர்மனியில் இருந்தது! இதுவும் களப்பணியாற்றி மக்களுக்கு நல்லது செய்வதாக சொல்லிக்கொண்டிருந்த ஒரு இயக்கம்!

ஜெர்மானிய வெள்ளை மக்களுக்கு மட்டும் சில நல்ல காரியங்களை செய்தது! இதில் உள்ளவர்கள் உண்டியல்களை குலுக்கிக்கொண்டு தெருத்தெருவாக வலம் வந்தனர். கிடைத்த பணத்தை மற்றும் பிற உபயோகமுள்ள பொருட்களை ஒன்று சேர்த்து இல்லாதவர்களுக்கு (அதாவது வெள்ளை ஜெர்மானிய மக்களுக்கு மட்டும்) கொடுத்தனர்!

இந்த இயக்கத்தைப்பற்றியும், அவர்கள் செய்த "நல்ல காரியங்கள்" பற்றியும் ஆவணங்கள் உள்ளன!

ஆனால் பிரச்சனை என்னவென்றால் இவர்கள் நாஜி இயக்கத்தின் ஒரு அங்கம் என்பதுதான்! அதாவது இட்லரின் கொலைகார பாசிச கும்பலின் ஒரு பகுதி! இருந்தும், உண்மையில் இந்த மாதிரி பணம் சேர்த்து இல்லாதவர்களுக்கு உதவும், களப்பணியாற்றும் ஒரு கும்பலாக இது செயல் பட்டது என்பது மறுக்க முடியாது!

நீங்கள் சொல்லும் லாஜிக் படி, ஏன் இவர்களையும் சமூக விரோதிகளாக பார்க்கவேண்டும்? அதற்க்கு பதில், என்ன இருந்தாலும், என்னதான் சிறிதளவு நன்மைகள் செய்தாலும், இந்த குழுவின் அடித்தளமாக அமைந்தது, கொலைகார நாஜி கும்பலின் சித்தாந்தங்களே! நாஜிகள் வேறு இவர்கள் வேறு இல்லை!

அதேபோல்தான் நம்ம நாட்டு மாவோ கும்பல்களும்! நல்லது செய்வதுபோல படம் காட்டினாலும், ஏதாவது கொஞ்சம் நல்லது செய்தாலும் (அப்படி ஒன்றும் செய்வதாக தெரியவில்லை) இவர்களின் அடித்தளம் கொலைகார கொள்கைகள் மட்டுமே!

அயோக்கிய ஹிட்லரின் நாசிகளை NSV செய்ததை வைத்து ஒருவர் பாராட்டினால் அது எவ்வளவு மடமையோ, அதே மடமை இந்த கும்பல்களை அவர்கள் செய்யும் கள-பணிகளுக்காக ஒருவர் பாராட்டுவதும்!

// ம.க.இ.க ஒரு குழுமம் அவர்களது கொள்கைகளுக்கு உடன்பட்டே அவர்கள் செயலாற்றுகிறார்கள், இதில் நீங்க என்ன தவறு கண்டீர்கள்!//

ஹிட்லரின் நாஜிகளும் ஒரு குழுமம், அவர்களின் கொள்கைகளுக்கு உடன்பட்டே அவர்கள் செயலாற்றினார்கள், இதில் நீங்கள் என்ன தவறு கண்டீர்? இந்த கேள்வி எவ்வளவு வக்கிரமானதோ, அதே வக்கிரமானதுதான் உங்கள் கேள்வியும்!!

கொடூரங்களுக்கும் கயமைகளுக்கும் தங்கமுலாம் பூசுவது என்று ஒருவர் தீர்மானித்து விட்டால், எந்த ஒரு விளக்கமும் அவர் கேட்கமாட்டார் என்று முடிந்துவிடும்! கடவுள் சார்ந்த மதங்களுக்கு மட்டும் பொருந்துவது இல்லை இது! மாவோ சார்ந்த கம்யூனிச மதத்திற்கும் இது பொருந்தும்!

அரைகுறை ஆண்டவனான கதை - 3

அரைகுறை ஆண்டவனான கதை - 3
----------------------------------






"To send men to the firing squad, judicial proof is unnecessary...These procedures are an archaic bourgeois detail. This is a revolution! And a revolutionary must become a cold killing machine motivated by pure hate. " --Ernesto 'Che' Guevara

"மரணதண்டனைக்கு ஒருவனை அனுப்ப சட்ட சாட்சியங்கள் தேவை இல்லை......இந்த வழிமுறைகள் எல்லாம் பழமையான பூர்ழுவாக்களின் விளக்கங்களாகும்! இது ஒரு புரட்சி! ஒரு புரட்சியாளன் கல் நெஞ்சத்துடன், வெறுப்பின் உந்தலால், கொலை செய்யும் இயந்திரமாகவேண்டும்!

இது இந்த புரட்சியாளரின் பல பொன்மொழிகளில் ஒன்று!! புரட்சி என்ற பெயரில் கொலைகளை ஞாயமாக்கும் ஒரு வன்முறை விரும்பிதான் இந்த சே!

“We must say here what is a well-known truth, which we have always expressed to the world: Shooting people yes, we have shoot people and will continuo to do so until it will be required”

வரைமுறை இல்லாமல் பலரை சுட்டுதள்ளியதைப்பற்றி உலகில் பல இடங்களில் கேள்வி எழுந்த பிறகு, சே கூறியது -
" நடந்தது எல்லோருக்கும் நன்றாக தெரிந்த உண்மை என்று சொல்லவேண்டும், அதை உலகிற்கு எப்பொழுதும் நாங்கள் சொல்லியதுதான்: மக்களை சுட்டது, ஆம், சுட்டோம், சுடுவோம், தேவைப்படும் வரை! "

"The peaceful road is eliminated and violence is inevitable. In order to achieve socialist regimes there will flow rivers of blood, the road to liberation should be continued even if it means the loss of millions of atomic victims "

அமைதி வழிகள் ஒழிக்கப்பட்டுவிட்டன, வன்முறை விடமுடியாத முறையாகிவிட்டது! சோஷலிச ஆட்சி முறை அமைக்கும் வழியில் ரத்த ஆறு ஓடினாலும், இது தொடரும்! கோடிக்கணக்கானவர்கள் அணுகுண்டினால் இறந்தாலும் கூட! - சோவியத் ரஷ்ய அணு குண்டுகள் கியூபாவில் இருந்த பொழுது மமதையுடன் சே பேசிய பேச்சுகள்! அமெரிக்காவின் மேல் அணு ஆயுதங்களை உபயோகிக்க மிக்க ஆர்வமாக இருந்தார், கியூபா நாடும் அதனுடன் அழிந்து போகும் என்ற ஒரு கவலையுமிலாமல் (அவர் அர்ஜென்டினா நாட்டை சேர்ந்தவர்)

(மேலும் வரும்!)

Monday, June 7, 2010

அரைகுறை ஆண்டவனான கதை - 2

அரைகுறை ஆண்டவனான கதை - 2
----------------------------------


சினிமா கதாநாயகர்களுக்கு மிக முக்கியமான தேவை அவர்களின் உருவத்தை நல்லபடியாக திரையிலோ அல்லது விளம்பரங்களிலோ அல்லாதோ வேறு எந்த ஒரு ஊடகத்திலோ காட்டுவது! அஜீத்து போன்ற நல்ல முகவட்டம் உள்ள ஒருவரைக்கூட ஒரு மட்டமான புகைப்படக்காரர் தன்னின் "திறமையினால்" கெடுக்க முடியும்! கதா நாயகிகளுக்கு கேட்கவே வேண்டாம்! எல்லா புகழும் ஒளிபதிவாளருக்கே! அவர்கள் நினைத்தால் கதாநாயகியை ஒரு வில்லி மாதிரியோ, அக்கா மாதிரியோ அல்லது பாட்டி மாதிரியோ கூட காட்ட முடியும்!

சாதாரண ஒரு மனிதரை, ஒரு நல்ல புகைப்படக்காரர் ஒரு சரியான முயற்ச்சியினால் ஒரு பெரிய ஆளுமை உடயவராகா கூட பதிவு செய்ய முடியும்!

ஜோசப் ஸ்டாலின் ஐந்தரை அடிதான். அவர் நல்ல முக வட்டம் கொண்டவரும் அல்ல! இருந்தாலும் அவரின் புகைப்படங்களை பார்த்தால் மிக அற்புதமாக இருக்கும்! ஹிட்லரின் நிலைமையும் ஏறக்குறைய இதேதான்! அவரின் photo shoot session's மிக பிரபலம்!

ஆகா, சொல்லவருவது, தலைவன் என்ற சொல்லத்துடிக்கும் ஒருவருக்கு முதலில் தேவை ஒரு நல்ல உருவ விளம்பரம்!

சே-குவாராவிர்க்கு அது கிடைத்ததுதான் நல்ல ஒரு ஜாக்பாட்!!!

இன்று எல்லோரும் பச்சை குத்தி கொள்ளும் மற்றும் டி சட்டைகளில் ஒட்டிக்கொள்ளும் சேவின் படத்தை எடுத்தவர் ஆல்பர்டோ கோர்டா என்பவர்! இவர் பிடேல் காஸ்ட்ரோவின் ஆஸ்தான புகைப்படக்காரர்! புகைப்படத்தில் பதிந்த சேயின் முக வாட்டத்திற்கு அவர் சொன்னது "“Guerrillero Heroico” (the heroic fighter), as “encabronadao y dolente” – angry and sad.

அதாவது கோபமுடன் வருத்தமும் கலந்த ஒரு வீரனின் படம் என்று!

மேலும் Jim Fitzpatrick என்ற ஓவியர் சேவின் இந்த புகைப்படத்திற்கு நல்ல ஒரு வடிவத்தைகொடுத்தார் (ubiquitous High contrast drawing)! அந்த வடிவம்தான் இன்று நாம் எல்லோரும் காணும் சே-வின் உருவமாகும்!

இதைப்பற்றி அவர் கூறுவது " I deliberately designed it to breed like rabbits," he says of his image, which removes the original photograph's shadows and volume to create a stark and emblematic graphic portrait. "His image will never die, his name will never die."

மேலும் சேவின் இந்த இமேஜை ஐரோப்பாவிற்கு எடுத்துசென்று பரப்பியவர் Giangiacomo Feltrinelli! அங்கிருந்தான் உலகம் முழுவதும் இந்த பிம்பம் பிரபலமாகியது!

சொல்லவருவது என்னவென்றால், சே-குவேரா என்ற மக்கள் காணும் ஒரு பிம்பம் திட்டமிட்டு பலரால் உருவாக்கப்பட்ட மாயதொற்றமே! அதற்க்கு முதல் படி அவரின் தோற்றத்தில் ஒரு அழுத்தம் கொடுத்து அவரின் மனநிலையை புரட்சி, புதியவை என்றவற்றுடன் சேர்த்து ஓட்டவைப்பதில் இந்த அவரின் படம் ஒரு முதல் படியே! அதுவும் வெற்றிகரமாக நடந்த முதல் படியே!

கொக்க கோலா விர்ப்பதர்க்கும் இதற்கும் ஒரு வித்தியாசமும் இல்லை!

(மேலும் வரும்)

Sunday, June 6, 2010

அரைகுறை ஆண்டவனான கதை!

அரைகுறை ஆண்டவனான கதை
--------------------------------

சோவியத் சர்வாதிகாரிகளுக்கு சர்க்கரை சப்ளை செய்யும் சாதாரண கடை!

என்னவென்று முழிக்கிறீர்களா? இதுதான் கியுபா என்ற சோசியலிச கம்யூனிச புரட்சியாளர்களின் சொர்கபுரி!!

சோவியத்து யூனியனிற்கு சர்க்கரை, அவர்கள் இந்த கடைக்கு கொடுத்தது பெரிய சில்லறை போக, டப்பா டப்பாவாக கச்சா எண்ணை! அப்படி கொடுத்ததை விற்று காசுபார்த்த கூட்டத்திற்கு பெயர் "புரட்சி பூமி"! இதில் குற்றங்கள் பல செய்து, அதற்க்கு புரட்சி என்றும் பெயரிட்டு சகட்டு மேனிக்கு தாண்டவமாடிய ஒருவர் சே குவேரா என்ற அழிதல் விரும்பி!!

அப்பேற்பட்ட மாசிலா மகானின் படத்தை சட்டையில் போட்டுக்கொண்டு "புரட்சி" "புரட்சி" என்று பாட்டு பாடும் புரட்சி விரும்பிகள் பல!! இதில் காமடி, இந்தியாவில், அதுவும் தமிழகத்தில் அவரின் படத்தை போட்டுக்கொண்டு ஒரு சிலர் கதை அளப்பது! இணையத்தில், கேட்கவே வேண்டாம்! பலர் இதை செய்கிறார்கள்!

வேற்று நாட்டு கொள்கைகள் மற்றும் உருவங்களை நாங்கள் அடிமைபோல பின்பற்றுவோம், வாழ்த்துவோம், துதிபாடுவோம், அவற்றிற்காக சண்டையும் போடுவோம் என்று எல்லோருக்கும் காட்ட இந்த சே குவேர துதி பாடும் வழி முறையை விட வேறு சிறந்த எடுத்துக்காட்டு இல்லை!

இந்த மா மனிதரை பற்றி கொஞ்சம் பார்ப்போம்!

கியூபாவை கைப்பற்றிய காஸ்ட்ரோ சே குவேராவை அந்த நாட்டின் National Bank இன் தலைவராக போட்டார்! அவர் முதலில் செய்த காரியம், புதிய பண நோட்டுகளில், தன பெயரால் கையெழுத்து போட்டு அச்சடித்தது!

அவருக்கு கீழு பணியாற்றிய "Ernesto Bentacourt" கூறுகிறார் : “[He] was ignorant of the most elementary economic principles.” Guevara’s powers of perception regarding the world economy were famously expressed in 1961, at a hemispheric conference in Uruguay, where he predicted a 10 percent rate of growth for Cuba “without the slightest fear,” and, by 1980, a per capita income greater than that of “the U.S. today.” In fact, by 1997, the thirtieth anniversary of his death, Cubans were dieting on a ration of five pounds of rice and one pound of beans per month; four ounces of meat twice a year; four ounces of soybean paste per week; and four eggs per month.

அதாவது, பொருளாதாரத்தில் அவரின் அறிவு, பொருளாதாரித்தில் உள்ள மிக அடிப்படையான விடயங்களில் கூட புரிதல் இல்லாமை என்ற நிலைமையில் மட்டுமே இருந்தது! மேலே குறிப்பிட்ட ஒரு கூட்டத்தில் அவர் உளறியதை பார்த்து பலர் வாயடைத்து போனார்கள்!

அடுத்து நிலச்ச்சீர்த்திருத்தங்களில் தன்னுடைய்ய திறமையை காட்ட நினைத்தார்!
பணக்காரர்களிடத்திலிருந்து நிலத்தை எடுத்து "ஏழைகளுக்கு" கொடுக்காமல் (அதுதானே சமூக நீதி?) ஆட்ச்சியில் உள்ள பணித்துரையினருக்கு (bureacrat) கொடுத்தார்!! (இந்த சட்டம் அவரின் வீட்டில் எழுதப்பட்டது)! இதுவும் இவர் செய்த பல குளறுபடிகளினால், 1961 முதல் 1963 வரை கரும்பு சாகுபடி (அந்த நாட்டின் ஒரே ஆதார பயிர்) பாதியாக குறைந்தது!

கியூபாவை தொழில் மிகுந்த நாடாக்குகிறேன் என்று இவர் அடித்த கூத்து பற்றி மிக விரிவான ஆதாரங்கள் குவிந்து கிடக்கின்றனா!

ஒரு கட்டத்தில் காஸ்ட்ரோவே ஆடிப்போய் இவர் போனால் போதும் என்ற நிலைமைக்கு வந்து விட்டார்!

உண்மை இப்படி இருக்கையில் இந்த அரைகுறை வன்முறை விரும்பியை ஒரு மிக்க அறிவாளி போல பலர் சித்தரிக்க விழைந்து அதில் வெற்றியும் கண்டார்கள்! பக்கம் பக்கமாக ஆதாரங்கள் வந்த பிறகும், அதை படிக்காமல், சே குவேராவை ஏதோ பெரிய புள்ளியாக எல்லாம் தெரிந்தவராக திரித்து அதில் மகிழ்ச்சி கண்டனர்!

மேலும் வரும்!

Tuesday, June 1, 2010

பரிந்துரை விளையாட்டு!!!

பரிந்துரை விளையாட்டு!!!
---------------------------

ஒரு அறிவாளி தன் பதிவில் ஒரு நாலு லிங்க்கு போட்டு, தோ படியுங்கள் என்று மட்டும் எழுதுகிறார்! அதற்க்கு ஒரு பத்து பரிந்துரைகள்! கவனிக்க வேண்டியது, இந்த அசுரத்தனமான அல்ப ஆசாமிக்கு முகமூடி மட்டும் தேவை!

இயல்பாகவே விடத்தை கக்கும் ஒரு அசிங்கம் ஒன்று ஒரு முக்கால் பக்கம் மூச்சு முட்ட முக்கியதர்க்கு பரிந்துரைகள் பல! எழுதியது என்னமோ அசிங்க ஆர்ப்பரிப்புகள்! அதில் கும்மி அடித்தது என்னவோ அதே நாலு சாம்ப்ராணிகள், அனால் ஏகப்பட்ட பரிந்துரைகள்! இந்த சகதிக்கும் முகமூடி தேவை!

இதைபோல இன்னும் சில சொத்தைகள் வாய்க்கு வந்ததை துப்பி போட்டு விட்டு, அதற்க்கும் நான்கைந்து குப்பை காப்பாளர்கள் வந்து அழுக்கு போதவில்லை தோண்டி எடுத்து அப்புங்கள், வாய் திறந்து உண்ணுகிறோம் என்ற அலப்பல்! பரிந்துரை மேல் பரிந்துரை வேறு! அதாவது உன்னாலே நான் கேட்ட வார்த்தைகள் கற்றேன், என்னாலே நீ ஏதாவது கற்றாயா, வாழ்க புரட்சி என்று துதியுடன்! உனக்கு என் முத்திரை, எனக்கு உன் முத்திரை என்ற கணக்கு!

முத்தாய்பிற்கு முன், பைத்தியம் என்று தன்னை அழைத்துக்கொள்ளும் நண்பர் ஒருவர், இந்த பாம்புகளுக்கு பண்ணை நடத்த சொல்லுகிறார்! விடம் எடுப்பதற்காக அல்ல, காலை சுற்றி அவைகள் கடித்து பழக காணிக்கையாய் இருக்க! இவரைப்போன்ற அறிஞர்கள் இந்த மாவோ கூடத்தின் usefull idiots படையை சேர்ந்தவர்கள்! எதுக்கும் இதைப்போன்ற ஜால்ராக்கள் இருக்கட்டும், புரட்ச்சி வரும்வரி இவைகள் உபயோகப்படலாம் என்ற எண்ணத்தில் இவர்கள்
வளர்க்கப்படுகிறார்கள் என்பது கூட புரியாது, வக்காலத்து வாங்குவதில் இன்ப சுகம் காண பழகிக்கொண்டவர்கள்! சொல்லி வைத்தார்ப்போல இவர் பதிவிற்கும் பல பரிந்துரைகள்!

இன்னும் ஒரு மேதாவி பாக்கி! இவருக்கு அப்பப்போ கோபம் வரும் ! இவர் எல்லோரையும் ஏசுவார்! பிற்போக்காளர்களை கண்டால் இவருக்கு கோபம் வருமாம்! அதை எதிர்ப்பது இவரின் உரிமையாம்! ஆதலால் இவர் எல்லோரையும் சாடுவாராம்! போதாக்குறைக்கு முகமூடியுடன் வருபவர்களை கண்டால் இவருக்கு ஆகாதாம்! ஆனால் இவர்களின் தோழர்களெல்லாம் முகமூடியுடன் வந்தால் அதற்க்கும் ஒரு விளக்கம் ரெடி! அதையும் யாராவது கேள்வி கேட்டால் வார்னிங் கொடுப்பாராம்! போதாக்குறைக்கு வாரத்திற்கு ஒரு ரெண்டு பக்கம் எழுதி, இந்த நாட்டு பாரம்பிரியங்களை திட்டி அதற்க்கு பின்னூட்டம் வருகிறதா என்று மணிக்கணக்கில் பார்த்துகொண்டிருப்பார்! அவ்வளவாக ஜன நடமாட்டம் இல்லாததால், இந்தமாதிரி சான்சு கிடைத்தால் போட்டு தாக்காமலா விடுவார்!

அதற்க்கும் பரிந்துரைகள் பல! குத்துவது யாரென்று பார்த்தால், அதே கும்பல்தான்! பரவாஇல்லை விடுங்க, இன்னைக்கு நல்லா தூங்கட்டும் என்று விட்டால், இந்த காமடியை கண்டு சும்மா இருக்க முடியவில்லை!

சரி, இந்த குப்பையை கிளறிய உலகமகா உத்தமர்கள் தளத்தில் வந்து கும்மி அடிப்பவர் யாரென்று பார்த்தால், அது எல்லோருக்கும் தெரிந்த ஒரு விடயம்தான்! ஒரு பத்து பேர் பூச்சாண்டி, கேள்விக்குறி, கொக்கா மொக்கா என்று பெயர்வைத்க்கொண்டு வேலை விட்டி இல்லாத சிலர்! இவர்கள் எழுத்துகளை கூர்ந்து கவனித்தால் இவர்கள் எல்லாம் ஒரு சில ஆசாமிகளின் வேறு வேறு முகமூடிகள்தான் என்பது தெரியவரும்!

நான் சில காலம் முன்னர் எழுதிய (அவர்கள் தளத்தில் போய் எழுதியது. ஒரு முறை அடி பட்ட பிறகு என் பின்னூட்டங்களை அனுமதிப்பதில்லை,அவ்வளவோ பயம் :-))) ஹி ஹி)வினவு டாக்க்டிக்ஸ் பற்றிய ஒரு பத்தியை இங்கே பிறகு பதிவிடுகிறேன்! அதற்க்கு முன்னர் இந்த பரிந்துரை பைத்திக்காரத்த்னத்தை பற்றி இன்னும் கொஞ்சம்!!

அதாவது இந்த தமிழ்மணம் இந்து மதம், இந்தியா, இந்திய இறையாண்மை, இந்திய பாரம்பரியம் பற்றி திட்டுபவர்களுக்கு ஒரு தளமாக ஆகிப்போய் விட்டபடியால், ஒத்த கருத்துடைய இதுபோன்றவர்கள் சமயம் கிடைக்கும்போழுதேல்லாம் ஒன்றாக கூடி காட்டு கூச்சல் போடுகிறார்கள்!

அதானால் ஒன்றும் குடி மூழ்கி போகாதுதான்! இது எப்படி என்றால் விரட்டி அடிக்கப்பட்ட ஒரு பத்து தவளைகள், பிழைக்க இடம் தேடி அலையும்போழுது கிடைத்த இடம்தான் இந்த திரட்டிகள்! இவர்கள் எழுதிய குப்பைகளை இவர்களே படித்து மகிழ்ந்து, கூத்தாடி கொண்டாடி, புரட்ச்சி வந்தது பார், முற்போக்கு பார், உலகமே வாழ்த்துது பார் என்று கூவ கிடைத்த ஒரு சான்சு! இதானால் கெட்டது இவர்களின் பிழைப்பு, அதாவது இவர்களை வேலைக்கு எடுத்து கணினியெல்லாம் கொடுத்து தங்களுக்க்காகத்தான் வேலை செய்கிறார்கள் என்று நம்பிக்கொண்டிருக்கும் கம்பனிகாரர்களின் பிழைப்பு!!

இவர்கள் எழுதுவதும், அந்த கணினியில் பாக்க்மேன் விளையாட்டு ஆடுவதும் ஒன்றுதான்! பாக்மன் (ஆரம்பகால versions நான் ஆடியது உண்டு)ஆட்டத்தில் பப்பில்களை உடைத்து பாய்ண்ட்களை எடுத்து முழுங்க வரும் சுறாக்களிடமிருந்து தப்பிக்க வேண்டும்! தமாஷாக இருக்கும்! பாய்ண்ட்டு எடுக்க எடுக்க குஷியாக இருக்கும்! அது தரும் போதை தலைக்கு ஏறி, ஒரு நல்லைக்கு ஒரு அரை மணி நேரம் ஆடவில்லை என்றால் வேலை ஓடாது!

அதே போலதான் நம்ம தமிழ் பதிவு எழுதும் முற்போக்கு செம்மல்களும்!

கண்டதை எழுதி, முதுகு சொரிய, யார் நன்றாக சொறிந்தார்கள் என்று தங்களின் குட்டை உலகிற்கு சொல்ல கிடைத்த நல்ல குட்டை இந்த திரட்டிகள்! முதுகு சொரியும் வழிமுறைதான்
இந்த பின்னூட்டம் இடும் வழிமுறை!. இந்த முதுகு சொறிதலுக்கு முத்தாய்ப்பு, "பரிந்துரை" என்ற விளையாட்டு!

இங்கே எழுதப்படாத சட்டம், திட்டி எழுதினால், அதாவது நாங்களோ அல்லது எங்களுக்கோ வேண்டப்பட்டவர்கள் திட்டினால், முதலில் செய்யவேண்டியது, பரிந்துரை! "அருமை",
"வழிமொழிகிறேன்" "மிக சரி" "டௌசர் கிழ்சிடீங்க" என்ற சொல்ல ஒரு கூட்டம்! இவர்களின்
அடுத்தகட்ட வழிமுறை பரிந்துரை!

அதாவது உலகெல்லாம் சொல்லுதுபார் என்று சொல்ல துடிக்கும் உலகம் தெரியாத,உலகுக்கே தெரியாத ஒரு சுண்டெலிகள் கூட்டம் தங்களுடைய இல்லாத இன்றியமையாமையை உலகிற்கு சொல்ல நடத்தும் வழிமுறைதான் இந்த பரிந்துரை டிராமா!

இவர்களின் கடவுள் ஜோசெப் ஸ்டாலின் வோட்டு போட்டு தேர்ந்தெடுக்கும் தேர்தல் வழிமுரைப்பற்றி ஒருமுறை சொன்னார்! Its not the people that vote counts, its the people who count the vote! அதாவது, ஓட்டுப்போடும் மக்கள் கூட்டம் முக்கியமில்லை, அதை எண்ணும் கூட்டமே முக்கியம்! ஸ்டாலின் வழி வந்தவர்கள் ஆயிற்றே! அதே வழிமுரைதானே இவர்களுக்கும்!

இவர்கள் வழிமுறைகளில், ஒட்டு (இங்கே பரிந்துரை)என்பது முடிவு செய்யப்பட்ட ஒன்றை உலகிற்கு சொல்லவதற்கு மட்டுமே! இது பிற்போக்கு, இது பொறிக்கித்தனம், இது அராஜகம்,
இது முற்போக்கு, இது புரட்சி, ஏனென்றால் நங்கள் முடிவெடுத்துவிட்டோம் என்று தாங்களாகவே எடுத்த முடிவை வெளியே சொல்ல பயன்படும் வழிமுறைதான் இந்த பரிந்துரை விளையாட்டு!

அதுவும் திரட்டிகளில் இவர்களின் குத்தகை மற்றும் அடிமைகள் பல இருப்பதால் இந்த விளாயாட்டு கன கச்சிதமாய் நடக்கிறது!

இதனால் என்ன பயன் என்று பார்த்தால் - ஹி ஹி ஹி, ஒன்றும் இல்லை!

(மாவோ, ஸ்டாலின், சே குவேரா போன்ற மா மனிதர்கள் உயிருடன் இருந்தார்களானால், சந்தோசப்படுவார்கள், இன்னுமாட எங்கள இவெங்க நம்புறாங்க என்று!)