visitors

Tuesday, July 27, 2010

துளிகள் - மேலும் சில

துளிகள் - மேலும் சில
--------------------

மூன்று வாரங்களுக்கு முன்னர் ஒரு சானலில் Bill Maher அவர்களின் documentary ஆன,
"Religulous" ஐ பார்த்தேன்!

முதலில், Bill Maher என்பவர் யார் என்பதை தெரிந்து கொள்ளவேண்டும்! அவர் ஒரு நடிகர்,
சமுதாய பார்வையாளர் மற்றும் விமர்சகர், எழுத்தாளர், அரசியல் விமர்சகர் மற்றும் பல பல
விடயங்களில் முத்திரை பதித்தவர். முக்கியமாக ஒரு நாத்தீகர்!

அவரின் இந்த டாகுமெண்டரி படம், மதங்களை கிண்டல் செய்யவே எடுக்கபட்டது, திரை அரங்குகளிலும் திரை இடப்பட்டது. இந்த படத்தின் பெயர் Religulous என்று முதலில் சொன்னேன். இது நடவில் உள்ள ஒரு ஆங்கில வார்த்தை இல்லை! ஆனால் அதற்க்கு அவர் கொடுத்த விளக்கம் - Religulous என்பது Religion + Ridiculous என்பதை சேர்த்து செய்ததாகும்! அதாவது மதம் + நகைக்கத்தக்க என்பவைகளை சேர்த்து செய்யப்பட்ட ஒரு சொல். அதாவது மதம் என்றால பார்த்து நகைகப்பட வேண்டியவை என்பதை அவர் சொல்லுகிறார்.

படு தமாஷாக மதங்களை கிண்டலடிக்கிறார். மத பரப்பாளர்களையும், பற்றாளர்களையும் சதாயக்கிறார்! மத நம்பிக்கையார்களும் அதை பார்க்கலாம், அதில் சொல்லப்பட்டதில் இருந்து கொஞ்சம் எடுத்துகொண்டு, தங்கள் மதங்களில் உள்ள extreme நிலைகளையும் ஒதுக்கலாம்.

சொல்லிக்காட்டப்பட வேண்டிய விடயம், இதை அமெரிக்க திரை அரங்குகளில் பிரச்சனை இல்லாமல் திரை இட்டார்கள். முன்னேறிய உலக நாடுகள் பலதில் திரை இடப்பட்டன, பிரச்சனை இல்லாமல். அதாவது, கிருத்துவ மதத்தை மிக அதிகமாக விமர்சித்த இந்த படம், கிருத்துவ நாடுகளில் பிரச்சனை இல்லாமல் பார்கபட்டது. ஆம், அங்கங்கே கோபம் இருந்தது, ஆனாலும், அந்த கோபத்தை யாரும் வன்முறையால் காட்டவில்லை!

கூகிள் வீடியோவில் அதன் காட்சிகள் இருக்கின்றன!

-----------


நித்யா மறுபடியும் போதனைகளை தொடங்கிவிட்டாராம். ஆதலால் சினம் கொண்ட சிலர், குறிப்பாக வலைப்பதிவுகளில் புரட்சி பேசும் சில அரை குறைகள் ஐயியோ அநியாயம் பார் என்று கூக்குரல் இடுகிறார்கள்!

அதாவது, அயோக்கியத்தனம் செய்து விட்டு மறுபடியும், கூசாமல் பொது வாழ்க்கைக்கு வருவது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் என்று சத்தம் போடுகிறார்கள்.

இதே போல அநியாயம் செய்து, அனால் "புரட்சி" பெயர் பலகை போட்டு மறைந்து கொண்டு கொட்டம் அடித்த சிலரை பற்றி பார்ப்போமா??

ஒரு டஜனுக்கும் மேற்பட்ட பெண்ணகளை மானப்பங்க படுத்தியவர். அவர் கையில் இருக்கும் இரகசிய போலிசின் பிடியில் யாரவது அழகிய பெண் மாட்டினால் உடனே தன் கைவரிசையை காட்டியவர்! இவரின் வண்டவாளங்கள் யாவையும் கடைசி வரை அறிந்தே, அது தக்க நேரத்திற்கு உதவும் என்று சும்மா இருந்த மற்றுமொரு மாபெரும் "புரட்சியாளர்"! இந்த அயோக்கியனின் பெயர் லாவேறேண்டி பேரியா! அந்த மாபெரும் புரட்சியாளர் வேறு யாரும் இல்லை. ஜோசெப் ஸ்டாலின்தான் அது!

லாவறேண்டி பேரியா ஸ்டாலினின் அடியாள். சுமார் இருபது வருடங்கள் ஸ்டாலினின் நிழலாக, ஸ்டாலின் சொன்னவர்களை ஒழித்து கட்டும் அடிமை! NKVD எனப்பட்ட (பின்னர் இதுவே KGB ஆனது) ரஷ்ய இரகசிய போலிசு மற்றும் உளவுத்துறையின் தலைவன். ஸ்டாலினின் வன்முறை எண்ணங்களுக்கு வடிவம் கொடுத்த ஒரு கம்யூனிஸ்ட் பெருமகன்!

இவனின் கற்பழிப்பு தாண்டவம் மற்றும் அராஜகம் ஸ்டாலினிக்கு நன்றாக தெரியும். ஆனால் அதனை தண்டியாமல், நேரம் வரும்பொழுது, அதாவது ஸ்டாலினிக்கு எதிராக பேரியா எப்போழுதாக திரும்பினால், அப்பொழுது அவனை போட்டு தள்ள அது உதவும், அதுவரை அவன் ஆடட்டும் என்று ஸ்டாலினால் விட்டு வைக்கபட்டான்!

பேரியா ஒரு சாம்பிள்தான்! இந்த புரட்சியாளர்களின் அசிங்க வண்டவாளங்கள் வெளியிடப்பட்டு நாட்கள் பல ஆகிவிட்டன! அதைப்பற்றி யார் இங்கு பேசப்போகிறார்கள் என்று நினைத்து இங்கே சில புரட்சி பொய்யர்கள், கதை விட்டு கொண்டிருக்கிறார்கள்!

நித்தியாவை திடட்டும். ஆனால், அதே சமயம் அதைவிட மிகக்கொடிய அசிங்கங்களையும் அராஜகங்களையும் நடத்திய திருடர்களுக்கு இவர்கள் கொடுக்கும் பெயர் "புரட்சியாளர்கள்"!


போதாகுறைக்கு, இந்த கயவர்களின் பெயரையும் படங்களையும் வலை தளத்தில் போட்டு அழகு பார்க்கும் ஆசாமிகளுக்கு, நித்தியா பெயரை கேட்டால் கோபம் வருகிறதாம்!!

நித்யா காவி கட்டிய அயோக்கியன் என்று சொல்லும் இவர்கள் தினமும் கும்பிடுவதோ சிவப்பு துணி கட்டிய சாக்கடைகளை!!

இவர்கள் செய்கிறார்களாம் புரட்சி, இவர்கள் எதிர்க்கிறார்களாம் அநியாயத்தை..இவர்கள் செய்கிறார்களாம் போராட்டம்.............கேக்கறவன் கேணையனாக இருந்தால்.........

Monday, July 19, 2010

துளிகள்!

துளிகள்!

மற்றொரு ரயில் விபத்து! சுமார் நூறு உயிர்கள் வரை பலியாகி இருக்கக்கூடும் என்று தெரிகிறது. மம்தா பாநேர்ஜி காரணம் தேடுவார். ஒரு வேளை புத்தா தேப் குண்டர்களை ஏவி விட்டு இதை செய்திர்க்கலாம், இல்லாவிடில் ஜோதி பாசுவின் ஆவி விளையாடி இருக்கலாம் என்று ஏதாவது கூறுவார். எதை தின்னால் பித்தம் தெளியும் என்று முழித்து கொண்டிருக்கும் இடதுசாரிகள், இதையும் சீரியசாக எடுத்துக்கொண்டு ஏதாவது பதில் கொடுப்பார்கள்!

பாவம் நம்ம ஊரு கம்யூனிஸ்ட்கள். இன்னும் கொஞ்சம் நாட்களில் தாங்கள் கட்டி வைத்த கோட்டை, அதாவது வங்காள ஆட்சி, ஒழிக்கப்படப்போவது உறுதி என்று புரிந்து விட்டதால், மிட்டாய் இழக்கப்போகும் சின்னப்பயல்களை போல பொருமிகொண்டிருக்கிரார்கள்.

பெங்காலில்தான் இப்படி என்றால் கேரளத்தில் அதை விட மோசம். ஆட்சி காலிஆகப்போவது உறுதி. பின்னரயி விஜயனும் அச்சு தாத்தாவும் ஆடும் கபடி ஆட்டம் காமடியிலும் காமடி. கேரளமே சிரித்து கொண்டிருக்கிறது. அச்சு தாத்தாவிற்கு என்ன போச்சு. பதவி போச்சென்றால், லோக்கல் பாலிட்பீரோ ஆப்பிசில் பொய் உட்கார்ந்து தேசாபிமானி படித்து, சாயவை குடித்து, அதே வேட்டி சட்டையில் காலம் தள்ளி விடுவார். ஆனால் விஜயன் கோஷ்டியோ அப்படி இல்லையே. ஏகத்துக்கு பதவி சுகம் மற்றும் அதனால் வந்த வரவுகளை அனுபவித்து ஒரு நிலைக்கு வந்தாச்சே! அதை எப்படி அவ்வளவு எளிதில் விடுவது என்ற கவலை. அவர் கவலை அவருக்கு. காங்கிரஸ் காரன் திருப்பி வந்தாங்கன்னா சும்மா விடுவானா? பங்கு கேட்ப்பர்களோ என்ற கவலையும் கூட!


நான்கு சகோதரர்கள் சேர்ந்து தங்களின் தங்கையின் ஆண் நண்பரை உதைத்ததால் அந்த பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் பையன் இறந்து விட்டானாம். இது நடந்தது பொக்காரோ நகரில். இது ஜாதி சம்மந்தப்பட்ட ஹானர் கொலையா என்று போலிசு விசாரித்து வருகிறது.

இது இப்படி என்றால் ஒரு ஜாதி கும்பல் ஒரே கோத்திரத்தில் இருக்கும் இருவர் மணமுடித்தால் கொன்று விடுவோம் என்று கத்துகிறது. அப்படி சொல்லுவது தவறு என்று கண்டிப்பதை விட்டு அரசியல் கட்சிகள் எங்கே ஒட்டு பொய் விடுமோ என்று கப்சிப்பென்று இருக்கின்றன. ஆக மொத்தம் மகளிர் தாங்களாகவே யாரையும் துணைவனாக தேடிகொள்ளக்கூடாது. அப்படி செய்தால் நாங்கள் தேடி-கொல்வோம் என்பதுதான் இங்கே வழிமுறை. ஆணாதிகத்தின் மொத்த குரூரமும் நம்மிடத்தில் இருக்கும்பொழுது, இங்கே தாலிபான் வரத்தேவை இல்லை என்று சொல்ல தோன்றுகிறது. அதான் இங்கேயே இருக்கே home grown Taliban!

பாகிஸ்தானை பற்றி தமாஷான ஒரு செய்தியை படிக்க நேர்ந்தது. ஒன்று, கூகிள் வெளியிட்டதாக சொல்லப்பட்ட செய்தி. வந்த விபரங்கள் நிஜமானாலும், சொலப்பட்ட செய்தி மற்றும் சொல்லப்பட்ட புள்ளி விபரம் முழு பாகிஸ்தானுக்கும் பொருந்தாது என்று கூகிளே நேற்று சொல்லிவிட்டது. அதற்க்கு காரணம், பாகிஸ்தானில் இன்டர்நெட் பார்ப்பவர்கள் மிக குறைவு என்பதால். ஆனாலும் பார்த்தவர் விபரங்கள் உண்மையே.

பலரை சிரிக்க வைத்த அந்த செய்தி - கூகிளில் செக்ஸ் காட்சிகளை, ஆபாச காட்சிகளை பற்றி அதிகம் தேடுபவர்கள் பாகிஸ்தானில்தான் உள்ளார்கள் என்ற புள்ளி விபரம்தான்! அதைவிட தமாஷு, இதில் தேடல்கள் மனித செக்ஸ்ஐவிட மனித-மிருக செக்ஸ் பற்றிய தேடல்கள் மிக அதிகம் என்பதுதான் (ஒட்டகம் மாடு அண்ட் மனிதன் வகைறாக்கள்)! Fox news மற்றும் பல செய்தி ஊடகங்கள் இதை கேட்டு பாகிஸ்தானுக்கு ஒரு பெயரும் வைத்து விட்டன. அது Pakistan இல்லை, Pornistan என்று. (அதாவது Porn என்றால், ஆபாச திரைப்படம்)!

இதை பார்த்து பாகிஸ்தானியர்கள் குறியோ முர்றியோ என்று கூச்சல் போட, கூகிள் சுதாரித்துக்கொண்டு, புள்ளி விபரங்கள் எடுக்கப்பட்ட ஜனத்திகை சிறிதானதால், இதை பாகிஸ்தானின் மொத்த அடையாளமாக காட்ட முடியாது என்று பட்டும் படாமலும் அறிவித்து விட்டது. அதாவது a lame reason.

ஆனால் உண்மை என்னவோ, அதிக மத வாதிகளை கொண்ட நாடான ஒன்று யாரும் பார்க்க வில்லை என்றால், நாடும் முதல் பொழுதுபோக்கு, இந்த மாதிரி விடயங்கள்தான் என்று எண்ணும் பொழுது , முக்கால் வாசி மனிதர்கள் வேடதாரிகளே, சராசிரிகளே என்று நினைக்க தோன்றுகிறது! (இதில் இந்தியாவும் முதல் ஐந்து இடங்களில் இருக்கலாம் என்று படித்ததாக ஞாபகம், ஆனால் கண்டிப்பாக ஆடு மாடு ஒட்டகம் அதில் இல்லை என்று குறிப்பிட்டிருந்தார்கள்)

தொடரும்.....

Tuesday, July 13, 2010

அயோக்கியத்தனம்!!

அயோக்கியத்தனம்!!

மர்மயோகி என்ற பெயரை வைத்துக்கொண்ட ஒருவர், திரு வால் பையன் அவர்களை மிரட்டி, மேலும் தமிழ்மணத்தையும் திட்டி பதிவு ஒன்றை போட்டிருக்கிறார்!!!

என்ன விடயம் என்று பார்த்தால், திரு வால் பையனும், அவரின் கூடவே எழுதும் (அல்லது அவரின் இன்னுமொரு பெயரா என்று தெரியாது) இராஜன் என்பவரும் இஸ்லாமை பற்றி கண்டபடி எழுதிவிட்டார்கள் என்று கோபப்பட்டு எழுதியது இது!!

திரு வால் மற்றும் அவரின் அடிபொடிகள் சிலர் இப்படி மதங்களை பற்றி கண்டபடி எழுதுவதை நான் கண்டித்திருக்கிறேன்! ஒரு முறை ஏசுவின் படத்தை அசிங்கமாக போட்டு ஏதோ கேவலமாக எழுதினர் இந்த ராஜன்! நானும் அதற்க்கு கடும் கண்டனங்கள் செய்தேன், மேலும் பலர் கடவுள் என்று நம்பும் ஒரு உருவத்தை கண்டபடி இகழ்வது தவறு என்றும் எழுதி இருந்தேன்! என்னை பொறுத்தவரை, கடவுள் மறுப்பு மிக ஜாக்கிரதையாக செய்யவேண்டிய ஒன்று! கடவுளை மறுங்கள், ஆனால் கேவலம் செய்யாதீர்கள் என்பதை நம்புபவன் நான்! திரு தருமி போன்ற ஒரு சிலரே ஒரு தன்மையுடன், நாகரீகத்துடன் வலை தளங்களில் இதை செய்கிறார்கள்! அவர்களின் எழுத்துகள் மிக வலுவானவை! பக்த்தர்களையும் யோசிக்க வைப்பவை! அதுதான் சிறந்த வழிமுறை! இல்லையேல், படிப்பவர் கோபம் கொள்ளுவார்கள்! சொன்ன விடயத்தை மறப்பார்கள்! திரு வால் போன்றவர்கள் இதை இன்னும் புரிந்து கொள்ளவில்லை!

மர்மயோகி என்று பெயர் வைத்துகொண்டிருப்பவர் ஒரு இஸ்லாமியர் என்று இப்பொழுதுதான் தெரிந்தது! அவர் வால் பையனை கண்டபடி தாக்கி மற்றும் மிரட்டி எழுதி இருந்தார்! மேலும் அவருக்கு வலு சேர்க்க இஸ்லாமிய பெயர்கள் கொண்ட சிலரும் வந்து வால் பையனை மிரட்டுகிறார்கள்! (இதில் வேடிக்கை திரு சென்ஷி என்று பெயர் வைத்துக்கொண்ட ஒருவர் இஸ்லாமியர் என்பது இன்றைக்கு தெரிந்து கொண்டேன்! அவர் பல தளங்களில், அதாவது இந்து மதத்தை கிண்டல் செய்யும் தளங்களில் வந்து சிங்கி அட்டிப்பவர்! ஆனால் வால் எழுதிய இஸ்லாமிய எதிர்ப்பு பதிவில் வந்து அவர் சொல்லுகிறார், வால் செய்வது தவறு என்று, அதாவது, இந்து மதத்தை தாக்கு பரவாஇல்லை, நாங்களும் வந்து ஜல்லி அடிப்போம், ஆனால் இஸ்லாமை பற்றி சொன்னால், கடும் கண்டனங்கள் தொடுப்போம் என்று. ஒரே நல்ல விடயம், இவர் மற்றவர்களை போல மிரட்டவில்லை! இஸ்லாமை பற்றி தவறாக பேசினால் கண்டனம் மட்டும் தெரிவிப்பாராம்! அந்த அளவில் கொஞ்சம் பரவா இல்லை! ஆனால், இந்து மதத்தை யாராவது திட்டினால், வந்து உட்கார்ந்து, அடி போடு, ஆம் அப்படிதான் என்று தட்டி கொடுப்பார், ஏனென்றால் அவர் முற்போக்கு)

விடயத்திற்கு வருவும்.

சரி, அண்ணன் மர்மயோகி கோபப்படுவது ஞாயம்தான் ஏனென்றால் அவரின் கடவுளை கண்டபடி திட்டுவதால் கோபம் கொண்டார் என்று நினைத்து நகரலாம் என்று நினைக்கையில், அவரின் பல பதிவுகளை, out of curiosity, கொஞ்சம் படித்தேன்!

அப்பொழுதுதான் அண்ணன் திரு மர்மயோகி ஒரு பயங்கர முற்போக்கென்று புரிந்தது! அதாவது தமிழ் வலை பதிவு முற்போக்கு! அதாவது இந்து மதத்தை மட்டும் திட்டி அதுதான் முற்போக்கு என்று கூவும் கும்பலை சேர்ந்தவர் என்று புரிந்தது!

நான் இரண்டு பின்னூட்டங்கள் இட்டேன்! அவை கீழே!!

------------

வடிகட்டின மத அடிப்படை வாதி திரு மர்மயோகி அவர்களே,

எப்படி எப்படி, நீங்கள் யாரை வேண்டுமானாலும் வாய்க்கு வந்தபடி ஏசலாம், பேசலாம், நம்பிக்கைகளை எள்ளி நகையாடலாம் ஆனால் உங்க நம்பிக்கைகளை யாராவது கேள்வி கேட்டால், கோபம் பொத்துக்கொண்டு வரும், மேலும் விட்டால் எதை வேண்டுமானாலும் செய்வீர்கள், உங்கள் மதத்தை கேவலமாக பேசினான் என்று!

பல இந்துகளுக்கு கண்ணகி கடவுள் - அந்த கண்ணகி பற்றி நீங்கள் தூற்றி எழுதவில்லையா?

இதோ கீழே நீங்கள் எழுதியது!

//அப்புறம் கண்ணகி என்றோருவள் தன் கணவன் கோவலன் மாதவி என்ற விலை மாதுவுடன் உல்லாசம் அனுபவிக்க இவள் வழியனுப்பி வைப்பாளாம், அப்புறம் தன் கணவனை தவறான தீர்ப்பால் தண்டனை வழங்கிய பாண்டிய மன்னனை நீதி கேட்டால் அவன் தவறை உணர்ந்து மனைவியுடன் தற்கொலை செய்து கொள்வானாம்..இவளும் வெறி அடங்காமல் மதுரையை எரித்துவிடுவாளாம்..இவள் ஒரு உத்தமியாம்.//

பல இந்துக்கள் தெய்வமாக வணங்கும் ஒரு உருவத்தை நீங்கள் கீழத்தரமாக திட்டலாம், ஆனால் யாராவது உங்கள் கடவுலாரையோ புனிதரையோ ஏதாவது சொன்னால் வருகுதுபார் கோபம்-

அடுத்தது நீங்கள் ஏசியது அவ்வையாரை பற்றி!

அவ்வையார் ஒரு சிறந்த முருக பக்தர்! இந்துக்கள் பலருக்கு அவ்வை ஒரு prophet! ஒரு புனிதர். அப்படி பட்ட, இந்துக்கள் மதிக்கும் ஒரு உருவத்தை நீங்கள் எப்படி எழுதினீர்கள்???
மேலும் இந்துக்கள் புனிதராக ஏற்றுக்கொள்ளும் வால்மீகியைப்பற்றி மற்றும் கம்பனை பற்றி என்ன எழுதினீர்கள்??

// வால்மீகி என்றொரு திருடன் எழுதிய கதையை அப்பட்டமாக காப்பியடித்து - அதில் வரும் கதாபாத்திரங்களை கடவுள்களாக மாற்றி எழுதிய கம்பன் என்றொருவன் //

இந்து மதத்தை பற்றியும், அவர்கள் வணங்கும் மதிக்கும் உருவங்களையும் அசிங்கமாக நையாண்டி செய்யும் உன்னைப்போன்ற மத வெறியர்களுக்கு என்ன கள்ளத்தனம் இருந்தால், உன் கடவுளார்களை எவனாவது விமர்சித்தவுடன் அது தவறு, ஏனென்றால் என் தெய்வங்களை மட்டும் யாரும் எதுவும் சொல்லக்கூடாது என்று சொல்லத்தோன்றும்!

வடிக்கட்டிய மத அடிப்படைவாதியான உங்களைப்போன்றவர்கள் இந்த மாதிரி பதிவு எழுத லாயக்கு அற்றவர்கள்!! நீ யோக்கியமாக இருந்தால் வால் பையன் மேல் கல்லடிக்கவும்!! நீங்களே மற்ற மதத்தை திட்டுபவர், நாராசமாக பேசுபவர்! அவரும் அதைதான் செய்தார்!!
ஆனால் நீங்கள் மட்டும் நல்லவர் அவரு கேட்டவர், அவரை தமிழ் மணம் நீக்கவேண்டும்!!!

எப்படி கதை????? வெட்ககேடு!! இந்தியாவில்தான் இது நடக்கும்!! (இந்த அழகில இவரு legal action எடுப்பாராம். ஞாயமா இந்துக்கள்தான் உங்கள் மேல் legal action எடுக்க வேண்டும்)

-------------------------

அதற்க்கு அவரும் ஒரு பதில் கொடுத்தார்!

திரு no அவர்களுக்கு
கண்ணகி ஒரு கற்பனை கதாபாத்திரம்..அதை தெய்வம் என்பதும் அந்த கதையை நன்புவதும் மூடத்தனம் என்று நான் மட்டும் சொல்லவில்லை..உங்கள் மதத்தை சேர்ந்தவர்களே சொல்கிறார்கள்..
ராமாயணம் என்ற கற்பனைக் கதையில் உள்ள பாத்திரங்களை கடவுள்களாக மாற்றியதால் எவ்வளவு பிரச்சினை எனபது உங்களுக்கே தெரியும்..

---------------------------

இதற்க்கு நான் கொடுத்த இன்னுமொரு பதில்

-----

// ராமாயணம் என்ற கற்பனைக் கதையில் உள்ள பாத்திரங்களை கடவுள்களாக மாற்றியதால் எவ்வளவு பிரச்சினை எனபது உங்களுக்கே தெரியும்.. //

முதலில் - நீங்கள் என்ன என் மதத்தை பற்றி சொல்லுவது? அதுவும் கற்பனை என்றும் கதை என்றும்?? உங்களுக்கு யார் சொன்னது அது கற்பனை என்று?? போய் பார்த்தீர்களா? அல்லது வால்மீகி எழுதும்போது கூட இருந்தீரா? பிரச்சனை வந்தால் அது கதையா?? உங்கள் மதத்தால் இன்றைக்கு உலகம் பூராவும் பிரச்சனைதான், ஆதலால் உங்கள் மதமும் கற்பனையா??

என்ன ஒரு அகங்காரம் இருந்தால் இந்து மத நடவுகளை கற்பனை என்றும், உங்கள் மத நடவுகளை மட்டும் உண்மை என்றும் சற்றும் சலனமிலாமல்
கூறுவீர்கள்! சரி சொல்லுங்கள் பரவாஇல்லை, ஆனால் அப்படி இருப்பவர் உங்களின் மதத்தை பற்றி சொல்லும்பொழுது பொறுத்து கொள்ள வேண்டும்! ஆனால் நீங்களோ அடாவடி அல்லவோ அடிக்கிறீர்கள்! வால் பையனை மிரட்டுகிறீர்கள்!

வால் பையன் அப்படி என்ன சொன்னார்! அதாவது நீங்கள் இந்துமதத்தை பற்றி சொல்லாததையா உங்கள் மதத்தை பற்றி அவர் சொன்னார்??

நீங்கள் மேலே கூறிய கூற்றில், இராமாயணத்தை எடுத்துவிட்டு ஹதீஸ் அல்லது வேறு ஏதாவது போடுங்கள்! அதைதானே அவரும் கூறினார்?

-ஹதீஸ் என்னும் கற்பனை கதையில் உள்ள பாத்திரங்களை புனிதர்களாக மாற்றியதால் எவ்வளவு பிரச்னை என்பது உங்களுக்கே தெரியும்-

இதை நீங்கள் இந்துமதத்தை பற்றி சொன்னால் அது முற்போக்கு, பகுத்தறிவு, அதே உங்கள் மதத்தை பற்றி சொன்னால் அகங்காரமா?

இந்த போக்குதான் இஸ்லாம் என்றாலே எல்லோரையும் ஓட வழி செய்கிறது!!

இன்னும் ஒரு காமடி, இத்தனை நாள் வரை வால் பையன் போன்ற பலருக்கு சிங்கி அடித்த பல கூட்டங்கள் (அதாவது அவர் இந்து மதத்தை தாக்கும் பொழுது மட்டும்) அவர் உங்கள் இஸ்லாமிய மதத்தை தாக்குகிறார் என்றவுடன் அவர் அயோக்கியர் ஆகிவிட்டாரோ??? So, உங்கள் முற்போக்கு நாடகம் எல்லாம் உங்கள் மதத்தை திட்டாத வரைக்கும்தான்!!

மாபெரும் அறிவு மோசடி என்பது எதுதான்!!

மறுபடியும் சொல்லுகின்றேன், கூசாமல் நீங்கள் இந்துமத அடித்தளங்களை பற்றி பேசலாம், கண்ணகியை அவள் இவள என்று ஏசலாம், கம்பனை அவன் இவன் என்று தூற்றலாம், எங்கள் கடவுளாரை கற்பனை என்று தாக்கலாம், ஆனால் உங்கள் கடவுள்களையும் புனித பிம்பங்களையும் யாரும் எதுவும் சொல்லக்கூடாது! அப்படி சொனால் அது அயோக்கியத்தனம்!! ஆனால் அதை நீங்கள் செய்தால் அது உங்கள் உரிமை!

தூ!!

-----------------------------------------------

இதுக்கு பேருதான் அயோக்கியத்தனம்!

அதாவது, உன் மதத்தை நான் என்ன வேண்டுமானாலும் சொல்லுவேன்! கேட்டு ஒதுங்கி போவது உன் தலை எழுத்து! ஆனால் என் மதத்தை பற்றி நீ ஏதாவது சொன்னால், விட்டேனா பார் உன்னை !!!